90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி.இவருக்கென அச்சமயம் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.அதன்பின்னர் ராசாத்தி வரும் நாள்,சின்னவர்,செந்தமிழ் பாட்டு,அமைதிப்படை என தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் கொடுக்க தொடங்கினார்.இவர் கொடுத்த ஹிட் படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியாக சினிமாவில் உருவெடுத்தார்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாத கஸ்தூரி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி தற்போது பட வாய்ப்புகள் சரியாக இல்லாத காரணத்தினால் தமிழ் படம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சென்றார்.அதுமட்டும் இல்லாமல் தற்போது சில அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து அண்மையில் மிகப்பெரியளவில் பேசப்பட்டார் கஸ்தூரி.தற்போதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு இவர் பல படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருப்பதால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் நடனமாடி ரீல்ஸ்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது இவர் நடனமாடி பதிவிட்ட வீடியோ ஒன்று இவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.மாடர்ன் உடையில் மிரட்டலான நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து;ள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் இவரது ரசிகர்கள் எப்படி இன்னும் அப்படியே இருக்கீங்க உங்களுக்கு வயசே ஆகாதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in