சிவகார்த்திகேயன் உங்களை மறந்துட்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் தாயை போல் பிரபல நடிகை ஆக வேண்டும் என்ற கனவுகளோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் கீர்த்தி சுரேஷ்.இவர் 2000ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தார்.இதனை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.இவர் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம்தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் உங்களை மறந்துட்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை வெகு அதிகமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார்.அண்மையில் நடிகர் மகேஷ் பாபுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்க்காருவாரி பட்டா திரைப்படம் தெலுங்கில் பிரமாண்ட வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் எகிறியுள்ளது.அதேபோல் தற்போது மலையாளத்தில் இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் டோவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

சிவகார்த்திகேயன் உங்களை மறந்துட்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ரஜினிமுருகன்,ரெமோ என்று இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.பின்னர் சமீபகாலமாக இவர்கள் கூட்டணியில் எந்த படங்களும் வெளிவரவில்லை இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் உங்களை மறந்துட்டாரா என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர் அவர் கூட 2 படம் நடிச்சிருக்கேன் இன்னும் டைம் இருக்கு நாங்க இருவரும் சேர்ந்து நடிக்க கதை வரும்போது இருவரும் சேர்ந்து நடிப்போம் என அறிவித்துள்ளார் மேலும் விஜய் சேதுபதி,ஜெயம் ரவி கூடவும் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment