கேஜிஎப் படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் யாஷ்.2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இப்படம் கொரோனா நிலவரத்தினால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளி சென்ற நிலையில் இறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகியது.உலகளவில் இப்படம் பெரும் வரவேற்பினை பெற்று வசூலை வாரிக்குவிக்க தொடங்கிவிட்டது.ரசிகர்கள் எதிர்பார்ப்பினை மட்டும் பூர்த்தி செய்யாமல் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவும் பூர்த்தி செய்துள்ளதால் இப்படம் இத்தகைய வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகர் யாஷ்.மேலும் நல்ல கதைகளை மட்டும் கேட்டு இனி நடிக்க போவதாகவும் எடுத்த பெயரை இழந்து விட கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் யாஷ்.மேலும் கேஜிஎப் பட தயாரிப்பாளர் அளித்த பேட்டி ஒன்றில் யாஷ் இனி பான் இந்தியா படத்தில் மட்டும் தான் நடிப்பார் என முன்னதாக அறிவித்திருந்தார்.கேஜிஎப் படத்தின் 3 பாகமும் உள்ள நிலையில் ஒருவேளை யாஷ் மீண்டும் மூன்றாம் பாகத்தில் நடிக்க தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.விரைவில் இவரது அடுத்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் யாஷ் அண்மையில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் .அதில் நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.மேலும் அவரை நடனம் ஆட அழைக்கவே வெட்கப்பட்டு குழந்தை போல் ஓடியுள்ளார்.இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.கேஜிஎப் படத்தில் யாஷை இறுக்கமான கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு தற்போது நடனமாடி பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in