ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்… பொங்கிய நடிகை குஷ்பு

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்... பொங்கிய நடிகை குஷ்பு 1

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்... பொங்கிய நடிகை குஷ்பு 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசை கச்சேரியில் பாஸ் வைத்திருந்த பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,இதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஏஆர் ரஹ்மானும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என கடும் கோபத்தில் ரசிகர்கள் உள்ளனர்,இந்நிலையில் தனது மகளும் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு ஏஆர் ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment