The Indian Times

“நான் Advocate, மவனே Uniform அ கெளட்டிடுவன் ” போலீசிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்

நம் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பாதிப்பு என்றால் அது கொரோன ஏற்படுத்திய பாதிப்பு தான். ஆயிரத்தை கடந்து லட்சத்தை கடந்து பல உயிர்களை காவு வாங்கியுள்ளது கொரோனா. கொரோன நோய் பாதித்து இறந்தவர்கள் பலர் என்றால் அது ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியும் பல உயிர்களை காவு வாங்கி விட்டது. இன்று இந்த நோயின் இரண்டாம் அலை அதிபயங்கரமான பரவி வருகிறது. இதனால் அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக் டௌன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது மாஸ்க் அணிவது அவசியம் என்றும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளிய வர வேண்டும் என்றும் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. என்னதான் இதற்காக அரசாங்கம் லாக்டௌன் அறிவித்து மக்களை பாதுகாப்பாக இருக்க சொன்னாலும். மக்களில் பலர் அதை பின்பற்றுவதில்லை.

Advertisement

இந்நிலையில் தற்போது , பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் காவல்துறையினர் அவரை மாஸ்க் அணிய சொன்னதும் அவர்களை போடா என்று மிக மோசமாக கத்தி கூச்சலிட்டுள்ளார் அந்த பெண்மணி. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in