தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டு முகங்களை கொண்ட வெற்றிப்பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன்.ஆடை வடிவமைப்பாளாரான இவர் நடிப்பின் மீது கொண்ட காதலால் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினார்.அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் 2008 ஆம் ஆண்டு வெளியாகிய பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவுக்கு அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி துணை நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் நடிகர் ஆக மட்டும் இல்லாமல் சிறந்த இயக்குனராகவும் அசத்தியுள்ளார்.2012ஆம் ஆண்டு ஆரோகணம் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி மற்றும் ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் பெயர்போனவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.இவரை பலருக்கும் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் தான் தெரியும்
அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகினார் இவர்.தற்போது சில தினங்களு முன்னர் தமிழக அரசால் சிறந்த துணை நடிகை விருது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது,இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் அவரது பெயரை கூப்பிடாமல் இருந்துள்ளனர்,இதனால் கடுப்பாகிய அவர் மேடை அருகே உள்ள அலுவலர்களை கூப்பிட்டு எனது பெயர் ஏன் வரவில்லை,அப்போ என்னை ஏன் நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள் என சண்டையிட்டுள்ளார்.உடனே அவரது பெயர் மீண்டும் மேடையில் அழைக்கப்பட்டு அவர்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது
https://youtu.be/BZoqN6KvWOQ?t=11
Embed video credits : Behindwoods tv
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in