The Indian Times

இதுவரை அணியின் Captain ஆக முடியாமல் போன Legendary Players! லிஸ்ட் உள்ளே

இன்று பலருக்கும் பிடித்த விளையாட்டாய் இருப்பது கிரிக்கெட் தான். சிலருக்கு அது பொழுதுபோக்கு ஒரு சிலர்க்கு அது வாழ்க்கையும் கூட. தற்போது லாக் டௌன் நேரங்களிலும் சிறந்த பொழுதுபோக்காய் இருந்தது ஐ.பி.எல் கிரிக்கெட் தான். என்னதான் இன்றைய இளைஞர்கள் தோனி , கோலி என்று அடித்துக்கொண்டாலும் இவர்களுக்கு முன்னரே பல லெஜென்டரி பிலயேர்கள் தங்களது கால் தடத்தை பதித்துவிட்டனர்.

கிரிக்கெட்டில் சாதனையாளர்களை இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு கேப்டன் பதவி இதுவரை கொடுத்தது இல்லை. அதில் முதலில் இருப்பவர் கிளென் மெக்ரா. ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. 90 களில் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் வலுவான அணியாக இருந்ததற்கு ஐவரும் முக்கிய காரணம் ஆனால் இறுதிவரை இவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.

இரண்டாவது ஸ்ரீலங்கா அணியின் சூழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் 2011 வரை தன்னுடைய அணிக்காக விளையாடினார். இதுவரை டெஸ்ட் தொடரில் 800 விக்கெட்கள் மற்றும் 534 விக்கெட்கள் ஒருநாள் தொடரில் எடுத்து சாதனை படைத்தும் இவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதில்லை.

அடுத்ததாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாடிய ஒரே வீரர் யுவராஜ் சிங். 6 பந்துகளில் 6 சிக்ஸர் பறக்கவிட்ட சாதனை இவருக்கு உண்டு. தன்னுடைய அணிக்காக இந்தளவிற்கு விளையாடிய வீரருக்கு ஒரு முறை கூட கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை.

Advertisement

அடுத்ததாக தென் ஆப்ரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன். ஒரு காலத்தில் இவர் பந்து வீச வந்தாலே எதிரில் எந்த பேட்ஸ்மேன் ஆடினாலும் எதிர்கொள்ள பயப்படுவார்கள். இவளவு திறமை இருந்தும், இதுவரை ரிட்டைர்மென்ட் அறிவிக்காத பிளேயர் ஸ்டெய்னும் ஒரு முறை கூட கேப்டனாக இருந்தது கிடையாது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in