விக்ரம் படத்தில் கமலுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 32 நாட்களாக செய்த காரியம்..ஒரு இயக்குனர் இப்படியெல்லாம் செய்வாங்களா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்திற்கு உலகநாயகன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விக்ரம் படத்தில் கமலுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 32 நாட்களாக செய்த காரியம்..ஒரு இயக்குனர் இப்படியெல்லாம் செய்வாங்களா? 1

விளம்பரம்

அண்மையில் படத்தின் கிளான்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த 15 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.படத்தின் ட்ரைலர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் எதிர்பார்ப்பினை தற்போது அதிகரிக்க செய்துள்ளது.மேலும் ஜூன் 3 ஆம் தேதி உலகநாயகனின் விக்ரம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில் உலகநாயகன் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்காக காத்திருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

விக்ரம் படத்தில் கமலுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 32 நாட்களாக செய்த காரியம்..ஒரு இயக்குனர் இப்படியெல்லாம் செய்வாங்களா? 2

விளம்பரம்

தற்போது விக்ரம் படத்தில் கமலுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இறங்கி ஒரு விஷயம் செய்துள்ளார்.படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.பொதுவாக படப்பிடிப்பில் நடிகர் கமல் அவருக்கு மேக்கப் போடுவதற்கு அவர் போடுவார் அல்லது அவரின் குழுவையே மேக்-அப் செய்ய அனுமதிப்பார். வேறு யாரையும் முகத்தினை தொட அனுமதிக்கமாட்டாராம்.இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் இயக்குனர் லோகேஷ் தான் உலகநாயகனுக்கு தொடர்ந்து 32 நாட்கள் மேக்கப் போட்டுள்ளார்.இதனைஅவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment