இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக பேசிய மதுரை முத்து

தமிழ் நாட்டில் தற்போது மதுரை முத்துவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு தனது நகைச்சுவையால் பலரையும் ஈர்த்துள்ளவர் இவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ஆண்டுகளாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.பல சேனல்களில் இவர் பணியாற்றினாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை தந்த தொலைக்காட்சி என்று கூறினால் அது விஜய் தொலைக்காட்சி தான்,அதனால் அங்கேயே தங்கிவிட்டார் மதுரை முத்து.

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக பேசிய மதுரை முத்து 1

விளம்பரம்

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.நிகழ்ச்சியை விட்டு நடுவே வெளியேறினாலும் அவ்வப்பொழுது வந்து மக்களை மகிழ்வித்து சென்று வந்தார்,மேலும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்து மேலும் தனியாக பல நகைச்சுவைகளை செய்து அசத்தினார்.தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.மேலும் யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் முதல் மனைவி கடந்த 2016ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் மனோபாலாவின் அரிய புகைப்படங்கள் இதோ...

இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக பேசிய மதுரை முத்து 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து இவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை பற்றி முதல் முறையாக பேட்டியில் கூறியுள்ளார்.இவர் கூறியதாவது,எனது இரண்டாவது மனைவி கையில் குழந்தையுடன் கஷ்டப்பட்டார்.அவரிடம் கல்யாணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன்,அவரும் சரி என கூறியதால் திருமணம் செய்துகொண்டேன்.இரண்டாவது திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது அதனை மீறி தான் கல்யாணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment