விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஆரம்பகட்டத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.சூரியன்எப் எம் மற்றும் மிர்ச்சி எப் எம் ஆகியவைகளில் ஆர்ஜே வாக பணியாற்றி வந்தார்.அங்கிருந்து அடுத்தகட்டத்தினை நோக்கி பயணிக்க வேண்டும் என தொலைக்காட்சிகளுக்குள் புகுந்தார்.முதன் முதலாக ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அங்கிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதியாக விஜய் தொலைக்காட்சியை வந்தடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விஜய் தொலைக்காட்சியை வந்தடையவும் இவரது புகழ் உச்சியை தொட்டது,இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் துணை கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரைக்கு வந்தார்.நவரச திலகம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து பல படங்கள் கதாநாயகனாகவும் நடித்தார்.இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பினை தராததால் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்தடைந்தார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் ,புதுசா மாடு வாங்கிருக்கோம்,அதை மேய்கிறதுக்கு மூக்குத்தி முருகனை வாங்கிருக்கோம் என பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மாகாபா நீங்க வேரெலெவெல் உங்களை போல காமெடி யாராலும் பண்ண முடியாது என அவரை புகழ்ந்து வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in