The Indian Times

கதறி அழுத மணிமேகலை..கடுப்பாகிய வித்யூலேகா..என்ன நடந்தது குக் வித் கோமாளியில்

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் கால் தடம் பதித்து வெற்றிநடைபோடுகிறது குக் வித் கோமாளி.குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர்கள் கோமாளிகளாக அடிக்கும் அலப்பறை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

கடந்த வார நிகழ்ச்சியில் வித்யுலேகாவிற்கு மணிமேகலை கோமாளியாக கிடைத்துள்ளார்.இதில் முதல் சுற்றில் அட்வான்டேஜ் டாஸ்க்கில் கலந்துகொள்ள வித்யூலேகா மற்றும் மணிமேகலை தேர்வாகிய நிலையில் அந்த அட்வான்டேஜ் டாஸ்க்கை கண்டு மணிமேகலை பின் வாங்கியுள்ளார்.அதாவது சுடுதண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்கை தோல் உரிப்பதே போட்டியாகும்.ஆனால் மணிமேகலைக்கு கடந்த சீஸனின் பொழுது சூடு தண்ணீர் காலில் விழுந்துள்ளதால்,அதில் இருந்து அவருக்கு சுடுதண்ணீரை கண்டால் பயம்.

இந்த டாஸ்கை செய்யமாட்டேன் என்று கூறவே அவரிடம் வித்யூலேகா பலமுறை கெஞ்சினார்.இருப்பினும் மணிமேகலை முடியாது என்று மறுக்கவே கடுப்பாகிய வித்யூலேகா வெளியே சென்றார்.இருப்பினும் மணிமேகலை மீண்டும் அழுதுகொண்டே உருளைக்கிழங்கினை உரித்துள்ளார்.இதனால் அங்குள்ள அனைவரும் மணிமேகலையை சமாதானம் செய்தனர்.இதில் பல காட்சிகள் விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு ஒளிபரப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.முடிந்த வரை உருளைக்கிழங்குகளை மணிமேகலை உரித்துள்ளார்.போட்டிக்கு பின்னர் வித்யுலேகாவும் மணிமேகலையும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

https://youtu.be/6lg-FB74xUw?t=54

Embed video credits : behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in