இந்த காரணத்தினால்தான் வைரமுத்துவை பொன்னியின் செல்வனில் சேர்க்கவில்லை- மணிரத்தினம்

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் 2 எனக்கு திருப்தியில்லை... இயக்குனர் மோகன் ஜி

இந்த காரணத்தினால்தான் வைரமுத்துவை பொன்னியின் செல்வனில் சேர்க்கவில்லை- மணிரத்தினம் 1

விளம்பரம்

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.வைரமுத்து பாடல்வரிகள் இப்படத்தில் இடம்பெறாதது குறித்து பல செய்திகள் வெளியாகியது

கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் அரிய புகைப்படங்கள் இதோ

இந்த காரணத்தினால்தான் வைரமுத்துவை பொன்னியின் செல்வனில் சேர்க்கவில்லை- மணிரத்தினம் 2

விளம்பரம்

இதுகுறித்து இயக்குனர் மணிரத்தினம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,வைரமுத்துவுடன் பல படங்களில் பணியாற்றி உள்ளேன்.திரையுலகிற்கு நிறைய புதிய திறமையாளர்கள் வருகிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் அந்த மாதிரித்தான் இதுவும் இதில் வேறேதுவுமில்லை என விளக்கம் அளித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment