இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை மீனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை மீனா 1

விளம்பரம்

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.நடிகை மீனாவின் கணவர் சில நாட்களுக்கு முன்னர் தவறிவிட்டார்.இதனால் கவலையாக இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை மீனா 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை மீனாவுக்கு மறுமணம்,தனது நண்பரை தான் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.இதற்கு மீனா தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது.இதுகுறித்து மீனாவிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது,நானே கணவர் இறந்த துயரத்தில் இருந்து மீண்டு வெளி வரவில்லை.அதற்குள் இதனை பற்றி பேசுவதா,நான் இப்பொழுது கதைகளை தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment