மெட்டி ஒலி 2 அப்டேட்.. ஆனால் இந்த முறை இவர் இல்லையாம்… ரசிகர்கள் அதிர்ச்சி

1999 ஆம் ஆண்டு சன் டிவியில் அக்ஷயா என்ற நாடகத்தினை இயக்கி சின்னத்திரையில் இயக்குனர் ஆக களம் இறங்கினார்.பல சீரியல்களை இயக்கியும் இவருக்கான வரவேற்பு எதிலும் கிடைக்கவில்லை.இறுதியாக 2022 ஆம் ஆண்டு மெட்டி ஒலி என்ற குடும்ப சீரியலை இயக்கினார்,இந்த சீரியலை சன் டிவி ஒளிபரப்பு செய்தது.இந்த சீரியல் மாபெரும் ஹிட் அடித்தது.இவரை தற்போது வரை அனைவரும் கோபி என்றுதான் அழைத்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு கோபி என்கிற கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார் திருமுருகன்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

மெட்டி ஒலி 2 அப்டேட்.. ஆனால் இந்த முறை இவர் இல்லையாம்... ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் நடிகர் பரத் வைத்து எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தினையும் இயக்கின் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இதில் எம்டன் மகன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடதக்கது.இதனை தொடர்ந்து பல வெற்றிகரமான சீரியல் தொடர்களை அளிக்க தொடங்கி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மெட்டி ஒலி 2 அப்டேட்.. ஆனால் இந்த முறை இவர் இல்லையாம்... ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகிய மெட்டி ஒலி தொடரின் இரண்டாவது பாகம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த இரண்டாவது பாகத்தை இயக்குனர் திருமுருகன் இயக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்கிரமாதித்தன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment