தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார் நயன்தாரா.தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் உறவினர்கள் மட்டும் நட்சத்திரங்களுடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியதாக தெரிவித்திருந்தார்.இதுகுறித்து விசாரித்தபொழுது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில்வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சில விதிமுறைகள் உள்ளன,அதாவது திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்,தம்பதியில் ஒருவர் குழந்தைப்பெற தகுதி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்,தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதி சான்றிதழ் கட்டாயம் மற்றும் ஒரு பெண் ஒருமுறை தான் வாடகை தாயாக இருக்க முடியும் ,நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகை தாயாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன.
இதில் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற முதல் விதிமுறையையே நயன்தாரா விக்னேஷ் மீறியுள்ளனர்,இதுகுறித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,வாடகை தாய் என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டதா அல்லது மீறப்பட்டதா என்பது விவாதங்களுக்கு ஒன்றுதான்,இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கூறி முறையாக விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
Embed video credits : POLIMER TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in