சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் இயக்குனர் மிஸ்கின்.இப்படம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து வெளியாகிய அஞ்சாதே படம் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.அதன்பின்னர் சில வெற்றி தோல்வி என படங்களை மாறி மாறி கொடுத்துள்ளார்.தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நாகா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பிசாசு.இப்படத்தில்இவருடன் ராதா ரவி,பிரக்யா,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் மிஸ்கின்.
அண்மையில் உலகநாயகன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மிஸ்கின் தென்பாண்டி சீமையிலே பாடலை அருமையாக பாடியுள்ளார்.இதனை உலகநாயகன் கமல்ஹாசன் ரசித்து கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் மிஸ்கின் பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்.ஏற்கனவே மிஸ்கின் அவரது படங்களில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் இயக்கத்திற்கும் மட்டுமில்லை பாடலிற்கும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in