தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.தற்போது இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.,செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.
இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதவாது,படம் முழுக்க ர த் தம் தான்,படப்பிடிப்புக்கு ஸ்க்ரிப்ட் எடுத்துட்டு போனாங்களோ இல்லையோ ர த் தம் நிறைய எடுத்துட்டு போயிருப்பாங்க போல,ஸ்க்ரீன் முழுக்க சிவப்பா தான் இருக்கு,என்ன ஐடியால இந்த படத்தை எடுத்தான்கண்ணே தெரியல,இத எவன் பார்ப்பான்.இதையெல்லாம் பார்த்தீங்கன்னா நீங்க தான் மிருகமாக மாறுவீங்க என கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Embed video credits : Tamil Talkies
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in