நாய் சேகர் உண்மையிலேயே RETURN ஆகினாரா? – திரை விமர்சனம்(?/5)

நடிகர் வடிவேலு சினிமாவில் ரெட் கார்டு வாங்கி பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.தற்போது பிரச்சனைகள் நீங்கவும் மீண்டும் படம் நடிக்க தொடங்கியுள்ளார்.அதன்படி தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் படத்தினை ஆவலாக கண்டு களித்து வருகின்றனர்.இப்படத்தின் விமர்சனத்தினை இங்கே காண்போம்

நாய் சேகர் உண்மையிலேயே RETURN ஆகினாரா? - திரை விமர்சனம்(?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி குழந்தை வேண்டி பைரவர் கோவிலுக்கு செல்கின்றனர்,அங்கு அதே சமயம் சித்தர் ஒருவர் வயிற்று பசியுடன் வரவே அவருக்கு உணவு கொடுத்து அவரது வயித்து பேசியை ஆற்றியுள்ளனர்.இதனால் சித்தர் தம்பதிக்கு நாய் குட்டி ஒன்றை பரிசாக கொடுக்கிறார்.அந்த நாய் குட்டி வந்த நேரம் நாய் சேகர் வடிவேலு பிறக்கிறார்,மேலும் பணமும் செழிக்கிறது.இந்நிலையில் இவர்கள் வீட்டில் வேலை செய்யும் ராவ் ரமேஷ் நாயின் ரகசியங்கள் தெரிந்து அதனை திருடி செல்கிறார்.நாய் போன பின்பு நாய் சேகர் குடும்பம் வறுமையை நோக்கி செல்கிறது.இதனால் நாயை மீட்க அதனை தேடி தனது குழுவுடன் செல்கிறார்,செல்லும் வழியில் அவர் சந்திக்கும் சிக்கல் என்ன,இறுதியாக நாயை கண்டறிந்தாரா? என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

நாய் சேகர் உண்மையிலேயே RETURN ஆகினாரா? - திரை விமர்சனம்(?/5) 2

பட விமர்சனம்

விளம்பரம்

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வடிவேல் திரையில் தோன்றவில்லை,இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது,இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூறவேண்டும்.வழக்கமான தனது சிறப்பான நடிப்பினை நடிகர் வடிவேலு வெளிப்படுத்தியுள்ளார்.படத்தின் முதல் பாதியில் உள்ள காமெடி காட்சிகள் பெரிதாக நகைப்பை ஏற்படுத்தவில்லை.இப்படத்தில் வடிவேலு கம் பேக் என்று சொல்லுவதற்கு ஏதுவாக அவர் பல படத்தில் உள்ள முக்கிய வசனங்களை மீண்டும் பேசியுள்ளார் ,ஆனால் அவை கவனத்தினை ஈர்க்கவில்லை.எப்பொழுதும் போலவே நடித்துள்ளார் வடிவேலு,இதனால் புதியதாக எதுவுமே இல்லையா படத்தில் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது,ஆனந்த் ராஜ்,கிங்ஸ்லி மற்றும் பிரசாத் ஆகியோர் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ஒரு சில இடங்களில் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளனர்.இரண்டாம் பாகத்தில் நாயை தேடி செல்வதால் கதை கொஞ்சம் சுறுசுறுப்பு பெறுகிறது.சந்தோஷ் நாராயணன் பாடல் மற்றும் பின்னணி இசையும் ஓகே தான்.மொத்தத்தில் அதிக எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம் நிச்சயம்

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment