நான் ரெடி தான் பாடலுக்கு சென்சார் போர்டு வைத்த ஆப்பு… விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

நான் ரெடி தான் பாடலுக்கு சென்சார் போர்டு வைத்த ஆப்பு... விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி 1

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது .லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இப்படத்தில் இருந்து நான் ரெடி தான் எனும் முதல் பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

நான் ரெடி தான் பாடலுக்கு சென்சார் போர்டு வைத்த ஆப்பு... விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி 2

விளம்பரம்

இப்பாடலுக்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியது,இந்நிலையில் இப்பாடலை தற்போது சென்சார் குழு மீண்டும் கவனத்தில் எடுத்துள்ளது.இப்பாடலில் இடம்பெற்றுள்ள பத்தாது பாட்டில்நான் குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,பத்தவச்சு போகய உட்டா பவர் கிக், மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளிய வருவான் டா போன்ற வரிகளை நீக்கியுள்ளது மேலும் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளையும் நீக்கி உள்ளது,இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment