நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி இருக்கும் படம் நானே வருவேன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி தாணு படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இந்துஜா ,எல்லி அவ்வரம்,பிரபு,யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தோடு போட்டிபோட்டு வரும் நானே வருவேன் படம் நேற்று வெளியாகியது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் நேற்று முதல் நாளில் சுமார் 10 கோடி 12 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.எந்த விளம்பரமும் இல்லாமல் வெளியாகிய தனுஷ் படம் முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூல் செய்துள்ளது கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை கலைப்புலி தாணு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in