நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி இருக்கும் படம் நானே வருவேன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி தாணு படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இந்துஜா ,எல்லி அவ்வரம்,பிரபு,யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.ரசிகர்கள் காலை முதல் படத்தினை ஆவலாக கண்டு களித்து வருகின்றனர்
படத்தின் கதை
படத்தில் தனுஷ் பிரபு மற்றும் கதிர் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.பிரபுவும் கதிரும் அண்ணன் தம்பிகள்.கதிர் நடவடிக்கைகள் சற்று மாறுபட்டு காணப்படுவதால் அவரை கோவிலில் பெற்றோர்கள் விட்டுவிட்டு பிரபுவை அழைத்து செல்கின்றனர்.நாட்கள் வேகமாக நகர பிரபு வளர்ந்து திருமணம் குழந்தை என செட்டில் ஆகிறார்.பிரபுவின் மகள் நடவடிக்கையில் பெரும் மாற்றம் தெரிகிறது ,பின்னர் அவர் உடலில் ஆவி ஒன்று இருப்பதை தனுஷ் கண்டறிகிறார்.அந்த ஆவியிடம் பேச முயற்சிக்கும் பொழுது தான் செய்வதை கூறினால் மகளை விட்டு வெளியே சென்றுவிவிடுவதாக கூறுகிறது,அது என்ன கூறியது,தனுஷ் மகளை மீட்டாரா என்பதே படத்தின் மீதி கதை
படத்தின் விமர்சனம்
படம் முழுவதையும் தனுஷ் என்ற ஒரே மனிதர் தாங்கி செல்வது ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இரண்டு கதாபாத்திரத்திலும் தனுஷ் பல வித்தியாசங்களை காண்பித்து நடித்து அசத்தி இருக்கிறார்.ஒரு பக்கத்தில் சாதுவாகவும்,இன்னோரு பக்கம் முரட்டுத்தனமான வில்லனாக நடித்து அசத்திவிட்டார் தனுஷ்.படத்தில் தனுஷ் மகளாக நடித்த பெண் தனது நடிப்பினை சிறப்பாக காண்பித்துள்ளார்.படத்தின் முதல் பாதி ஹாலிவுட் பேய் படம் போல மிரட்டுகிறது.முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லை,இரண்டாம் பாதி முழுக்க கதையுடன் செல்வதால் வேகம் மெதுவாகி உள்ளது.படத்திற்கு யுவன் இசை அதிக வலு சேர்க்கிறது.படத்தில் வசனங்கள் அதிகம் இல்லை ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது
நானே வருவேன் திரைப்படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in