The Indian Times

பழனியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன் – Video

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த தமிழக வீரர் நடராஜன் சொந்த ஊரு திரும்பியபோது பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய வழிபட்டார். அவர் கோவிலைவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். வயதான நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இந்த IPL 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவரில் ஆறு பந்து யார்க்கரை வீசும் திறன் கொண்ட நடராஜன்.

Advertisement

ஆஸ்ட்ரேலியா உடனான போட்டியில் எதனை மறந்தாலும் தமிழக வீரர் நட்ராஜனை யாராலும் மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இவர் நெட் பவுலிங் வீரராக அணியில் இடம் பெற்று இருந்தார். அதற்கு பிறகு வருண் மற்றும் சைனிக்கு உண்டான காயம் காரணமாக டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்பட்டார். அதற்கு பிறகு அந்த வாய்ப்பை இவர் செம்மையாக பயன்படுத்தி கொண்டார். ஒரே சுற்று பயணத்தில் அனைத்து போட்டிகளிளும் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் நட்ராஜன் தான் என்று பாராட்டி உள்ளனர். Watch the video below.

Advertisement

Video Credits: Puthiya Thalaimurai Youtube Channel 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in