ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருக்கா….சர்ச்சைக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்ட நட்சத்திரா

பிரபல சின்னத்திரை நடிகை நட்சத்திரா,இவர் யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.அறிமுகம் ஆகிய முதல் நாடகத்திலேயே தனது நடிப்பு திறமையை காண்பித்து மக்களை கவர்ந்தார்.தற்போது இவர் காதலித்து வந்தவரை திருமணம் செய்ய உள்ளார்.இந்நிலையில் இவருடன் இதே நாடகத்தில் நடித்த இவரது தோழி ஸ்ரீநிதி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பினார்.அடிக்கடி எதையாவது செய்து பரபரப்பினை கிளம்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்ரீநிதி.

ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருக்கா....சர்ச்சைக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்ட நட்சத்திரா 1

விளம்பரம்

தற்போது ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் நேரலையில் நட்சத்திராவுக்கு ஒரு பையன புடிச்சிருக்கு இவர் ரொம்ப நல்லவரா இருக்காரே என நான் தான் அறிமுகப்படுத்தினேன் அவருடன் பேசினாள்.ஒரு மாதத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்,நல்ல பொண்ணை விடக்கூடாதுனு புடிச்சி வச்சிட்டாரு.கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அவருக்கு நிச்சயம் நடைபெற்றது.ஆனால் எங்களுக்கு தெரியாது.அவளுக்கு நான், சைத்ரா, ஷபானா, எங்கம்மா என நிறைய பேர் இருக்கோம்.அவளை மூளைச்சலவை செஞ்சிட்டாங்க,நான் அவ கூட பிறந்த தங்கச்சிய கூட கூப்பிடாமலா நிச்சயதார்த்தம் பண்ணுவீங்கனு கேட்டதுக்கு என்னை அடிக்க வந்துட்டாங்க அவங்கம்மா,நட்சத்திரா வாழ்க்கையை காப்பாற்ற முடியவில்லை,அன்றில் இருந்து மன அழுத்தத்தில் இருக்கிறேன்,ஷூட்டிங் போக முடியவில்லை,டேன்ஸ் ஆட முடியவில்லை அவள புடுச்சு வச்சிருக்காங்லானு தெரியல. என் நம்பரை பிளாக் பண்ண வச்சிருக்காங்க. மேலும் vj சித்துவால் தான் நட்சத்திரா விஷயத்தில் எனக்கு பயமா இருக்கு. என்ன அடிச்சாங்க, திட்டினாங்க என ஸ்ரீநிதி தெரிவித்தார்.இது பெரும் சர்ச்சை ஆகியது.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருக்கா....சர்ச்சைக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்ட நட்சத்திரா 2

விளம்பரம்

இந்நிலையில் பல ரசிகர்களும் நட்சத்திராவிடம் இதுகுறித்து கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.தற்போது அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக நட்சத்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில அவர்,நான் நல்லா இருக்கிறேன்,எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் உள்ளார்,அதனால் தான் அவர் இப்படி செய்கிறார்.அதனை தெரிந்துகொண்ட நீங்கள் அவர் கூறுவதை நம்பமாட்டிர்கள் என்று நினைத்தேன் அதனால் தான் நான் வீடியோ போடவில்லை ,தற்போது அனைவரும் கேட்பதால் இந்த வீடியோ வெளியிடுகிறேன்,அவளுக்கு தெரியாது எதை பொது இடத்தில் பேச வேண்டும் என ,நான் நன்றாக இருக்கிறேன் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment