தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
திருமணத்திற்கு பின் நயன்தாரா தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.புகைப்படத்தில் நயன்தாரா சேலையில் கழுத்தில் தாலியுடன் கியூட் ஆக உள்ளார் .ரசிகர்கள் நயன்தாராவை பார்த்து வியந்து புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in