சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா….மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா....மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார் 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் இவர்களது திருமணம் சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்நிலையில் அங்கு பாதுகாப்புக்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா....மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார் 2

விளம்பரம்

இந்நிலையில் நயன்தாரா திருமணத்திற்காக அங்கு வந்த பொதுமக்களை கடற்கரைக்கு செல்ல அனுமதிக்காததால் பொதுமக்கள் வாக்கு வாதம் செய்தனர்.இந்நிலையில் கடற்கரை பொது இடம் அங்கு பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமை மீறிய செயல் என சமூக ஆர்வலர் சரவணன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.மேலும் இந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டு விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருமணம் முடிந்து தொடர்ந்து நயன்தாராவுக்கு பிரச்சனை வருவதால் சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment