தாராவை தாரமாக்கி தாய்லாந்தில் ROMANCE பண்ணும் விக்னேஷ் சிவன்….

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தாராவை தாரமாக்கி தாய்லாந்தில் ROMANCE பண்ணும் விக்னேஷ் சிவன்.... 1

விளம்பரம்

திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களின் இந்த திருமண வீடியோவை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் முடிந்த அடுத்த நாள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு திருமணத்திற்காக சென்று விட்டனர்.கேரளாவில் இருந்து அவர்கள் ஹனிமூன்க்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.

தாராவை தாரமாக்கி தாய்லாந்தில் ROMANCE பண்ணும் விக்னேஷ் சிவன்.... 2

விளம்பரம்

தாய்லாந்து சென்ற விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது மனைவி நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அசத்தி வருகிறார்.இந்த புகைப்படங்கள் பெரும் அலாவு ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது இவர் மேலும் சில தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படஙகள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.விரைவில் இவர்கள் நாடு திரும்பி நயன்தாரா ஜவான் படத்தில் கலந்துகொள்ளவும்,விக்னேஷ் சிவன் தல அஜித் படத்தின் வேலைகளை தொடங்கவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment