The Indian Times

கணவனை நிகழ்ச்சியில் கிண்டலடித்த பெண்ணுக்கு பதிலடி கொடுத்த கோபிநாத் | நீயா நானா

தொகுப்பாளர் கோபிநாத் பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.சமூகத்தில் உள்ள முக்கியமான நிகழ்வுகளை வாதமாக கொண்டு இரு அணியினரை வைத்து பேசவைக்கப்படும் சுவாரசியமான நிகழ்ச்சி இந்த நீயா நானா.இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.நீயா நானா வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் இன்றைய வாரம் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிக்கும் கணவனுக்கும் இடையே வாக்குவாதம் வைக்கப்பட்டுள்ளது.பலரும் தங்களது கருத்துக்களை நிகழ்ச்சியில் கூறி அசத்தி வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தனது மகளின் ரேங்க் கார்டினை நான் கையெழுத்திட்டால் கணவர் கோபித்துக்கொள்கிறார்,அவர் படிக்காததால் நீண்ட நேரமாக ரேங்க் கார்டினை பார்த்து வருவதால் தான் கையெழுத்து போடுவதாக நக்கலாக பதில் கூறியுள்ளார்,

இதுகுறித்து தந்தையிடம் கேட்டபொழுது,எனது மகள் நான் எடுக்காத மதிப்பெண்களை அவர் எடுத்திருப்பதால் அதனை ஆனந்தமாக பார்த்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதனை கேட்ட கோபிநாத் எல்லாருக்கும் எல்லாம் தெரியாது,தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை,ஆனந்தமாக இருப்பதற்கு அறிவு தேவை இல்லை ,தான் செய்யமுடியாததை தனது மகள் செய்துள்ளதை பார்க்கும் தந்தை தனக்கு காவியமாக தெரிவதாக கூறி நிகழ்ச்சி இறுதியில் வழங்கும் பரிசை நிகழ்ச்சி நடுவே வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளார்.மனைவியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in