“இனிமே என்னபண்ண போறேன்னு தெர்ல” பிக் பாஸுக்கு பிறகு மக்களிடம் மனதார நன்றி கூறிய நிரூப்! Niroop First Video After BiggBoss

பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் நிரூப் நந்தகுமார். இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு மக்கள் நன்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்காது. ஆனால் யாஷிக்காவின் காதலனாக சில வருடங்களுக்கு முன்பு தெரிந்த்திருக்க கூடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்றும் சொல்லலாம். இவருக்கும் சினிமாவில் நடிக்க அதிக ஆசை என்றே சொல்லலாம். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்ததாக அவரே கூறியுள்ளார்.

"இனிமே என்னபண்ண போறேன்னு தெர்ல" பிக் பாஸுக்கு பிறகு மக்களிடம் மனதார நன்றி கூறிய நிரூப்! Niroop First Video After BiggBoss 1

விளம்பரம்

மேலும் இவரது உயரத்தைக்காட்டி மக்கள் இவரை வாய்ப்புகள் தேடிச்செல்லும் போது புறக்கணித்ததாகவும் கூறினார். ஆனால், பிக் பாஸுக்குள் நுழைந்த நாள் முதலே போட்டியில் மட்டும் அதிக ஆர்வம் கொண்டு விளையாடி வந்தார். இவரது உயரம் மற்றும் எடை பார்த்து இவருடன் விளையாட சக போட்டியாளர்கள் பயந்து சற்று தள்ளி இருந்தனர் என்பதும் நாம் அறிந்த ஒன்றே! பிக் பாஸ் வீட்டில் இவர்மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தது இமான் அண்ணாச்சி மற்றும் பிரியங்கா தான். என்ன தான் இவர்மேல் பிறர் அன்பு செலுத்தினாலும், போட்டியில் மட்டுமே குறிக்கோளாக இருந்து வந்தது ஆச்சர்யத்தை வழங்கியது. போட்டியில் வெல்ல முனைப்புடன் செயல்பட்டு இறுதி சுற்று வரை தேர்வானார்.

"இனிமே என்னபண்ண போறேன்னு தெர்ல" பிக் பாஸுக்கு பிறகு மக்களிடம் மனதார நன்றி கூறிய நிரூப்! Niroop First Video After BiggBoss 2

விளம்பரம்

ஆனாலும் இறுதி சுற்று வரை வந்த இவரால் போட்டியில் ஜெயிக்க முடியவில்லை. அதற்குமேலாக மக்களின் அன்பையும் பெயரையும் புகழையும் இவர் சம்பாதித்து உள்ளார். இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முதலாக மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

https://www.youtube.com/watch?v=G7KhyhL4J44

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment