The Indian Times

கொம்பர்களை ஆளப்போவது தலைவனா? தலைவியா? பரபரப்பின் உச்சத்தில் சர்வைவர்!

காட்டுக்குள் உயிர்பிழைக்கும் போட்டியாகவே சர்வைவர் நிகழ்ச்சி பொதுமக்களிடையே காணப்படுகிறது! பொதுமக்களின் நடுவே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், போராட்டம் நிறைந்த போட்டியாக  பார்க்கப்படும் இந்த போட்டியில் இவர் நெறியாளராக வருவது பல மக்களால் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது!

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வாடிய மற்றும் மக்களிடையே பிரபலமான நடிகர்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களை அடர்ந்த காட்டுக்குள் அழைத்து வந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுக்காமல் அலைக்கழிக்கும் நிகழ்ச்சி என்றும் இதை கூறலாம்! காடர்கள் வேடர்கள் என இரு அணிகளாக பிரிந்து போட்டிபோட்டு கொண்ட போட்டியாளர்கள் தற்பொழுது கொம்பர்கள் அவதாரத்தில் களமிறங்கியுள்ளனர்! மேலும் இனி என்னவெல்லாம் நடக்கும் என்ற ஆர்வமும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது! மெல்ல மெல்ல இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது! அந்த ப்ரோமோவில் அர்ஜுன் என்ன சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்!

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in