“இஷ்டத்துக்கு பேசாத நீ” – பத்திக்கிச்சு பாவனி – நிரூப் சண்டை! Bigg Boss Promo 01

வழக்கம் போல சூடு பிடிக்க தொடங்கிவிட்டது பிக் பாஸ் என்று தான் சொல்ல வேண்டும்! பாக்க மட்டும் பயங்கரமாக இல்லாமல் செயலிலும் பயங்கரமாக முழுமுயற்சி செய்து போட்டியாளர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியவர் தான் நிரூப்! வருண் தனது நாணயத்தை பயன்படுத்தி இந்த வார தலைவராக ஆனாலும் நிரூப்பிடம் அதிக ஆளுமை இருப்பது தெரியவருகிறது! மேலும் தனது ஆளுமையை சரியாக பயன்படுத்தும் ஒரு நபராகவே இவர் மக்கள் மத்தியில் பார்க்கப்படுவதாக சில கருத்துக்களும் பரவி வருகின்றது! "இஷ்டத்துக்கு பேசாத நீ" - பத்திக்கிச்சு பாவனி - நிரூப் சண்டை! Bigg Boss Promo 01 1அது மட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம் கொடுத்து அதற்கேற்றவாறு உடை அணிந்து அவர்களை போலவே நடந்துக்க சொல்லி அறிவுரை செய்தால் மொழி பிரச்சனை காரணமாக தாமரைக்கும் மதுமிதாவுக்கு சண்டை முற்றிப்போனதும் ஆட்டத்தை மேலும் சூடுபிடிக்க செய்தது! மேலும், இன்னும் எனக்கு தமிழ் சரியாக தெரியாது என்ற போர்வைக்குள் மது ஒளிந்து கொண்டது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர தொடங்கிவிட்டது! நிரூப் தனது அனுமதி இல்லாமல் அல்லது தான் கொடுத்த நேரத்திற்கு மேல் அதிக நேரம் படுக்கை அறையில் உள்ளவர்களுக்கு பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்றே! இதனால் பிரியங்கா உட்பட அனைவரும் முகம்சுழித்துக்கொண்டே இருந்த வண்ணம் உள்ளனர்! இந்நிலையில் இன்றைய அடுத்த ப்ரோமோ வெளியாகி உள்ளது! அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்!

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment