The Indian Times

1லட்ச ரூபாய் புடவை எடுத்த மருமகள்.. அரண்டு போன பாண்டி… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

இன்றைய புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், சரவணனின் திருமணத்திற்கு துணி எடுக்க சென்றுள்ளனர். அங்கு பத்தாயிரம் என தவறாக பார்த்து மருமகளுக்கு 1 லட்சத்து பத்தாயிரத்திற்கு புடவை எடுத்துக்கொடுக்கிறார் பாண்டி. இறுதியாக வந்த பில்லை கண்டு கடும் அதிர்ச்சி அடைகிறார் பாண்டி.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in