ராஜ்கிரணுடன் அதர்வா இணைந்து அதிரடி காட்டும் “பட்டத்து அரசன்” FIRST SINGLE இதோ

பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா.அப்பாவை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நடிகராக களம் இறங்கியவர் இவர்.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.அப்பாவை வைத்து சினிமாவுக்குள் வந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த இடத்தினை அடைந்துள்ளார் அதர்வா.பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.முதல் படமே நல்ல வரவேற்பினை ரசிகர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.அறிமுக படம் என்பது போல் இல்லாமல் நடித்த அனுபவம் உள்ளது போல இப்படத்தில் பட்டையை கிளப்பினார் அதர்வா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  VIJAY ANTONY-ன் ROMEO படத்தின் FIRST SINGLE வெளியாகியது

ராஜ்கிரணுடன் அதர்வா இணைந்து அதிரடி காட்டும் "பட்டத்து அரசன்" FIRST SINGLE இதோ 1

விளம்பரம்

ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர்.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் இவர் கில்லாடி,பல வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் அதர்வா. இவர் அண்மையில் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் சில நாட்களுக்கு முன்னாள் வெளியாகியது.ஆனால் எதிர்பார்த்த வரவேற்பினை இப்படம் பெறவில்லை. அதனை தொடர்ந்து இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ட்ரிக்கர் படம் வெளியாகியது இப்படமும் சரியான வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

கட்டாயம் படிக்கவும்  பாம்பன் பாலத்தின் அழகை ரசிக்கும் ரட்சிதா மஹாலக்ஷ்மி

ராஜ்கிரணுடன் அதர்வா இணைந்து அதிரடி காட்டும் "பட்டத்து அரசன்" FIRST SINGLE இதோ 2

விளம்பரம்

தற்போது மீண்டும் நல்ல படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைய பல முயற்சிகளை செய்து வருகிறார்.அதன்படி தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பட்டது அரசன் என்ற படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார்.இவர்களுடன் ஆர் கே சுரேஷ்,ராதிகா சரத்குமார்,ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் இருந்து யாரோ யாரோ என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது,பாடலாசிரியர் மணி அமுதவாணன் பாடல் வரிகளில்,யாழின் நிஜார் இப்பாடலை பாடியுள்ளார்.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

விளம்பரம்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment