சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதின் மூலம் அமீருடன் நட்பு ஏற்பட்டது.இந்த நட்பு காதலாக மாறியது.அமீர் பலமுறை தனது காதலை பாவனியுடன் கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை,இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இருவருக்கும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் நடனமாட தொடங்கினர்.விடா முயற்சிகளினால் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் இறுதிவரை நடனத்தினால் நடுவர்களை அசத்தியெடுத்தனர்.
இறுதி போட்டியிலும் கடுமையாக நடனமாடி டைட்டிலயும் வென்றனர்.இதனால் இருவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர்.டைட்டிலை வெற்றிபெற்ற கையுடன் தனது காதலை அமீரிடம் பாவனி கூறியுள்ளார்.இந்நிலையில் இறுதி போட்டிக்காக பாவனி மிகுந்த அளவு தன்னை வருத்திக்கொண்டு பயிற்சி செய்துள்ளார்,அவர் பயிற்சி செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இவர் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலனாய் தற்போது டைட்டில் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in