தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் மட்டும் சுமார் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முன்பதிவு தொடங்கிய உடனே இப்படத்திற்கான ஒரு வார காட்சிகள் தமிழகத்தில் விற்பனையாகி விட்டது. எந்த படமும் செய்யாத சாதனையை இப்படம் செய்து அசத்தி உள்ளது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும் ஒருவார முடிவில் இப்படம் 300 கோடியை பெற்று அசத்தியுள்ளது.தற்போது பொன்னியின் செல்வன் முக்கிய இடத்தில் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக விண்வெளியாகிய 2.0 படத்தின் வசூலை முந்தியுள்ளது,அதாவது அமெரிக்காவில் 2.0 படம் $5.50 M டாலர் வரை வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது,தற்போது இந்த வசூலை பொன்னியின் செல்வன் முந்தியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in