வெளியாகியது பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பொன்னி நதி பாடல் | PONNIYIN SELVAN FIRST SINGLE

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

வெளியாகியது பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பொன்னி நதி பாடல் | PONNIYIN SELVAN FIRST SINGLE 1

விளம்பரம்

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படத்தின் போஸ்டர்களை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.டீசரில் நடிகர் விக்ரம் நடிப்பில் அசத்தியிருக்கிறார் அதேபோல கார்த்தி மற்றும் ஜெயம் ரவியும் தங்களது பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளனர்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

வெளியாகியது பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பொன்னி நதி பாடல் | PONNIYIN SELVAN FIRST SINGLE 2

விளம்பரம்

செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வழக்கம் போல ஏ ஆர் ரஹ்மான் தனது ஸ்டைலில் இசையில் மிரட்டியுள்ளார்.இளங்கோ கிருஷ்ணன் இப்பாடலை எழுத ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளார்.பாடல் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.மீதமுள்ள பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

விளம்பரம்

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment