தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரணிதா,இவர் பொற்கி என்ற கன்னட சினிமாவில் நடித்து திரை உலகில் நுழைந்தார்.அதன்பின்னர் இரண்டாவது படமான எம் பில்லோ எம் பில்லடோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தனது முதல் இரண்டு படங்களிலேயே இரண்டு மொழி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிய ஒரே நடிகை இவர் தான்.பின்னர் 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய உதயன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியுடன் இணைந்து சகுனி, மாஸ் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அதன்பின்னர் தமிழில் சரிவர படங்கள் அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் இவர் தான் காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் ப்ரணீதா.இந்நிலையில் இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் இன்று தனது பெண் குழந்தைக்கு ஆந்திர மாநிலம் திருப்பதியில் மொட்டை போட்டுள்ளார்.இதற்கு தனது கணவருடன் ப்ரணிதா கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதுவரை தனது மகளின் முகத்தினை யாருக்கும் காண்பிக்காத நிலையில் தற்போது மீடியாவுக்கு தனது மகளை காண்பித்து இருக்கிறார் ப்ரணிதா.ப்ரணிதா போலவே மகள் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : DAILY CULTURE
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in