இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தேறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.எனவே அவரை வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார்
ஜவான் படத்தின் கதை என்னோட படத்தின் கதை அதை அட்லீ சுட்டுவிட்டார் என தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,நான் தயாரித்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பேரரசு படத்தின் கதையை மையமாக வைத்து தான் ஜவான் படம் எடுக்கப்பட்டு வருகிறது,இதுகுறித்து கேள்விபட்டநான் அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்படம் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.இந்த புகாரை திரைப்பட சங்கம் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Embed video credits : POLIMER NEWS
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in