சமீப காலத்தில் வெளியான படங்களில் ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து மாபெரும் தாக்கத்தை உண்டாக்கிய படம் ஜெய் பீம் என்றால் அது மிகையாகாது! அத்தனை சிறப்புமிக்க படம் தான் ஜெய் பீம்! 28 வருடங்களுக்கு முன்பு நெஞ்சை உறையவைக்கும் ஒரு கொடூர சம்பவம், அநீதி இழைக்கப்பட்டதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
மேலும், 28 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்புமிக்க ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே படமாக எடுத்து அந்த படம் இணையத்தில் வெளியானதை அடுத்து உலக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது! ஆதிக்க சாதிகள் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயல்கள் இன்றளவிலும் நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒன்றே!
அப்படி யார் அதிகாரத்தின் பெயரிலோ அல்லது சாதியின் ஆளுமையினாலோ சாமானிய மக்களை ஒதுக்கினாலோ அல்லது ஒடுக்கினாலோ அவர்களுக்காக சட்டம் முன்வந்து அவர்களின் அநீதிக்கு உரிய நியாயம் கிடைக்கும் படி செய்யும் என்பது இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது! இந்நிலையில் செங்கேணியாக நடிக்க சொன்னால் செங்கேணியாகவே வாழ்ந்த லிஜோமோல் அவர்களுக்கும் ராஜாக்கண்ணு அவர்களுக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன!
இந்நிலையில் வீடு கட்டமுடியாமல் நிஜ வாழ்க்கையில் தவித்து வரும் செங்கேணி அதாவது உண்மையாக பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பார்வதிக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவை நீங்களே பாருங்கள்!
A house for Rajakannu’s family 🙏🏼 #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021
மேலும், அவர் தெளிவாக வெளியிட்டுள்ள செய்தி இதுவே! அதையும் படியுங்கள்!
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in