The Indian Times

சுரேஷ் ரெய்னாவை தூக்கிய மும்பை போலீஸ்

மும்பையில் நகரில் இருக்கும் இரவுநேர விருந்து நடக்கும் நைட் கிளப்ல் ஒன்றில் மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்த கோவிட்-19 விதிமுறைகளை மீறி பார்ட்டி நடைபெற்றதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேரைக் காவல்துறையினர் கைiது செய்தனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இந்த வருடம் நடந்த போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அடுத்த வருடம் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கும் தற்போது ரெய்னா தயாராகி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் புதிய வகை கரோனா தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவித்தது. அதன்படி இரவு நேரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மும்பையில் இருக்கும் ட்ராகன் ஃபளை கிளப் என்கிற நைட் கிளப்ல் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பொது வெளியிலில் இருந்ததாக அதிகாலை 2.30 மணியளவில் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேரைக் காவல்துறையினர் செய்தனர்.

தொற்று பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எனப் பல குற்றங்களுக்காக மும்பை காவல்துறையினர் 188, 269, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் சுரேஷ் ரெய்னா மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in