The Indian Times

ராஜா ராணி 2 சீரியல் கடைசி நாள் ஷூட்டிங்… சோகமாக வீடியோ வெளியிட்ட கதாநாயகன் சித்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்நிலையில் இவரும் நாடகத்தினை விட்டு வெளியேறியுள்ளார்.தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Embed video credits : SHREYA SIDHU

தற்போது நாடகத்தில் சிவகாமி விக்கியை கொ லை செய்ததும் அதனை மறைக்க சரவணன் உதவியதும் போலீசிடம் இருந்து தப்பிக்க பல திட்டங்களை போட்டும் வருகின்றனர்.ப்ரோமோவில் விக்கியை கொ லை செய்தவர்களை சந்தியா தேடி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் வீட்டு நிகழ்ச்சியில் சிவகாமி குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார்.அங்கு போலீஸ் படைகளுடன் வருகிறார் சந்தியா,நிகழ்ச்சி முடிந்ததும் சரவணனை கைது செய்து அழைத்து செல்கிறார்.இறுதியாக சரவணனை காப்பாற்ற சிவகாமி கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறார்.பின்னர் நடக்க போவது என்ன யார் சிறைக்கு செல்கிறார் என்பதே இறுதி கதை,இத்துடன் நாடகமும் முடிகிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் சித்து,இறுதி நாள் ஷூட்டிங்கில் வீடியோ எடுத்து அனைவரது கருத்துகளையும் கேட்டு ரசிகர்களுக்கு யூடியூபில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றாலும்.

நாடகம் முடிவது சற்று ஏமாற்றத்தினை அளிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.இது பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.ரசிகர்கள் பலரும் இந்த நாடகத்தினை மிஸ் செய்வதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in