பாடல் வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டதா..பாடகி ராஜலெட்சுமியே அதிதி பற்றி OPEN TALK

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் கோவில்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்தனர்.இந்நிலையில் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.இவரின் குரலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு

பாடல் வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டதா..பாடகி ராஜலெட்சுமியே அதிதி பற்றி OPEN TALK 1

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அதேபோல் அவரது மனைவி ராஜலக்ஷ்மியும் பல திரைப்படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் திடீரென ஒரு பக்கம் சர்ச்சை கிளம்பியுள்ளது.அதாவது கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன் இப்படம் நாளை வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.மேலும் இவர் ஏற்கனவே பாடகி என்பதால் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் மதுர வீரன் என்ற பாடலை பாட அதிதிக்கு வாய்பளித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா

பாடல் வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டதா..பாடகி ராஜலெட்சுமியே அதிதி பற்றி OPEN TALK 2

விளம்பரம்

ஆனால் இந்த பாடலை முன்னதாக ராஜலக்ஷ்மியின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.பின்னர் அதிதி பாடியுள்ளார். இந்த தகவல் வெளியாகியதை தொடர்ந்து அதிதி வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாக நெட்டிசன்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாடகி ராஜலக்ஷ்மி பேட்டியளித்துள்ளார்.அதன்படி அவர் கூறியதாவது,விருமன் படத்தில் யுவன் சங்கர் ராஜ உடன் இணைந்து நான் பாடிய மதுரை வீரன் பாடலில் எனது குரலுக்கு பதிலாக அதிதி குரல் வந்ததில் எந்த வருத்தமும் எனக்கில்லை சினிமாவில் இதுபோன்று நடப்பது சகஜம் ஒரு பாடலுக்கு எவர் குரல் பொருத்தமாக உள்ளதோ அவரை தான் பாட வைப்பார்கள், இதற்காக அதிதி சங்கரை விமர்சிப்பது பார்க்கும்பொழுது வருத்தமாக உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment