தென் இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் தான் உள்ளது என கூறிய ராஷ்மிக்கா-தென் இந்திய சினிமாவை கேவலப்படுத்தியதாக ரசிகர்கள் கொந்தளிப்பு

கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

தென் இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் தான் உள்ளது என கூறிய ராஷ்மிக்கா-தென் இந்திய சினிமாவை கேவலப்படுத்தியதாக ரசிகர்கள் கொந்தளிப்பு 1

விளம்பரம்

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை ,இதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா

தென் இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் தான் உள்ளது என கூறிய ராஷ்மிக்கா-தென் இந்திய சினிமாவை கேவலப்படுத்தியதாக ரசிகர்கள் கொந்தளிப்பு 2

விளம்பரம்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இந்நிலையில் இவர் அண்மையில் கலந்துகொண்ட பாலிவுட் நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் தீ போல வேகமாக வைரலாகி வருகிறது.வீடியோவில் ராஷ்மிக்கா தென் இந்திய சினிமா பாடல்களில் இருப்பது மசாலா மற்றும் ஐட்டம் பாடல்கள் தான்,பாலிவுட்டில் தான் அதிக ரோமேன்ஸ் பாடல்கள் இருப்பதாக கூறி தரைகுறைவாக பேசியுள்ளார்.இது பெரும் கடுப்பினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இதனால் தென் இந்திய சினிமா ரசிகர்கள் ராஷ்மிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இந்நிலையில் ராஷ்மிக்காவின் இத்தகைய பேச்சினால் வாரிசு படத்தின் வசூலில் எதாவது சிக்கல் வந்துவிடுமோ என ரசிகர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

https://twitter.com/BoSouthIndia/status/1608001177253457922?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1608001177253457922%7Ctwgr%5E0dd3faa5a3dbb2da27255acc8f12cad7889aa69c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Frashmika-talked-badly-about-south-indian-cinema-1672284644

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment