தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இவர்கள் திருமணம் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் நேற்று ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மகாலக்ஷ்மி உடன் நேரலையில் வந்து பேசியுள்ளார் மேலும் ரசிகர்களின் அணைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.நேரலையில் பேசிய மகாலட்சுமி கூறியதாவது,என்னை என்ன வேண்டாலும் சொல்லிக்கோங்க,பணத்துக்காக கல்யாணம் பண்ணுனேனு என்ன வேணா சொல்லிக்கோங்க ஆனா தனது கணவரை உடல் குறித்து கிண்டல் செய்யவேண்டாம் என தெரிவித்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in