தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கணவருடன் வெளியே செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹாலக்ஷ்மி பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு தற்போது வைரலாகி வருகிறது.அதன்படி தற்போது மஹாலக்ஷ்மிக்காக அவரை நடு இரவில் பிரியாணி சாப்பிட அழைத்து சென்றுள்ளார்.இந்த புகைப்படத்தினை எடுத்து மஹாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் தனது தொந்தரவையெல்லம் பொறுத்துக்கொண்டதுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்கு ரவீந்தரை பாராட்டி வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in