RE ENTRY-க்கு பிறகும் இப்படியா நடப்பது.. வடிவேலுவால் செம்ம காண்டாகிய சந்திரமுகி 2 படக்குழு

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

RE ENTRY-க்கு பிறகும் இப்படியா நடப்பது.. வடிவேலுவால் செம்ம காண்டாகிய சந்திரமுகி 2 படக்குழு 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

RE ENTRY-க்கு பிறகும் இப்படியா நடப்பது.. வடிவேலுவால் செம்ம காண்டாகிய சந்திரமுகி 2 படக்குழு 2

விளம்பரம்

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய நாய் சேகர் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.தற்போது சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் சந்திரமுகி 2 படக்குழுவினர் வடிவேலு மேல் செம்ம கோவத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,காரணம் 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வர சொன்னால் தாமதமாக 11 மணிக்கு வருகிறாராம்,இதனால் வடிவேலுவின் பல காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எந்தளவிற்கு இந்த செய்திகள் உண்மை என்பது தெரியவில்லை.இதுகுறித்து கருத்து தெரிவித்த ரசிகர்கள் இது வதந்தியாக இருக்கும்,வடிவேலு அப்படி செய்பவர் அல்ல,அவர் அப்படி செய்திருந்தால் இந்நேரம் அவர் வைகைபுயலாக இருக்க முடியாது என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment