1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார் இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர்
சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை சந்திரசேகருக்கும் இடையே உள்ள மோதல் அனைவருக்கும் தெரிந்ததே.
அண்மையில் இவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மகன் விஜய் தந்தையின் பிறந்தநாளில் கலந்துகொள்ளாமல் உள்ளார்.மகன் பேரன் பேத்தி என பலர் இருந்தும் யாருமில்லாதவர் போல தனது மனைவியுடன் மட்டும் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சந்திரசேகர்.இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது மேலும் விஜயை விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.என்னதான் சண்டையாக இருந்தாலும் அப்பாவின் 80வது பிறந்தநாளுக்கு வரவேண்டாமா என விஜய் மீது விவாதங்களை வைக்க தொடங்கினர்.
ஆயிரம் தான் மகன் நெருங்கவில்லை என்றாலும்,தனது 80வது பிறந்தநாளில் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் சிறப்பு பூஜை செய்துள்ளார் மேலும் மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்துள்ளார்.இந்த செய்தி இணையத்தில் வெளியாகியது
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் பெற்றவர்களின் மனம்,பெற்றோர்கள் எக்கேடு கெட்டும் போகட்டும் என பிள்ளைகள் நினைத்தாலும் பிள்ளைகள் நன்றாக 100 வருடங்களுக்கு வாழ வேண்டும் என நினைப்பதே பெற்றோர்களின் மனது.இது பெற்றோர்களின் இயல்பு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் பலர் தளபதி விஜய் தந்தையிடம் சேர வேண்டும் என கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in