எனக்கு பட்டம் தேவை இல்லை அன்பே போதும்..நடிகை சாய் பல்லவி

மருத்துவர் ஆன சாய் பல்லவி நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினார்.ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.சிறு காதாபாத்திரத்தில் சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.இன்று தெலுங்கு சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் சாய் பல்லவி .

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

எனக்கு பட்டம் தேவை இல்லை அன்பே போதும்..நடிகை சாய் பல்லவி 1

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் என்ற மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவது இவரது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக தான் அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

எனக்கு பட்டம் தேவை இல்லை அன்பே போதும்..நடிகை சாய் பல்லவி 2

விளம்பரம்

தற்போது இவர் தெலுங்கில் நடிகர் ராணாவுடன் இணைந்து விராட பருவம் என புதிய படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,எனது பெயரின் முன்பு அல்லது பின்பு எந்த பட்டமும் போட்டுக்கொள்வது சரியல்ல,நான் வாங்கிய மருத்துவர் பட்டமே போதும்,லேடி பவர் ஸ்டார் என என்னை அழைக்காதீர்கள்.இது போன்ற பட்டங்கள் என்னை கவராது,ரசிகர்களின் அன்பினால் வளர்ந்தேன்,அவர்களுக்காக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் மேலும் நான் சாதாரணமாகவே இருக்க விரும்புகிறேன் மேலும் இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடி தான் ஏற்படும் என அறிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment