தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் குஷி படத்தில் நடித்து வருகிறார்.தற்போது சமந்தா தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதாவது Polymorphous Light Eruption என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.இதனால் இதற்கு சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார்.சமந்தா.அவர் விரைவில் நாடு திரும்பி மீண்டும் குஷி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in