தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் சரத்குமார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. பலரையும் தனது நடிப்பால் அசத்தினார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்
தற்போது தளபதி விஜயின் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் பெரிய பழுவேட்டயராக நடித்த பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் சரத்குமார் மனைவி பெயரை காவியா என கூற சரத்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்,என் மனைவி பெயர் ராதிகா மாத்தி கூறி குடும்பத்துல குழப்பம் பண்ணிடாதீங்க என நகைச்சுவையாக கூறியுள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in