சத்தியமா நான் சசிகுமாருங்க..என கூறியும் உள்ளே விட மறுத்த ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள்…

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தற்போது சசிகுமார் இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

சத்தியமா நான் சசிகுமாருங்க..என கூறியும் உள்ளே விட மறுத்த ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள்... 1

விளம்பரம்

சசிகுமார் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது தாடி தான்.அவரை எப்பொழுதுமே தாடியில் பார்த்துவிட்டதால் தாடி தான் அவரது அடையாளமே என்று ஆகிவிட்டது.தற்போது சசிகுமார் தாடி இல்லாமல் ஸ்டார் ஹோட்டலுக்குள் போக முயற்சி செய்யவே அவரை அங்கு ஊழியர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள நகைச்சுவை சம்பவம் அரங்கேறியுள்ளது.அதனை அவரே தெரிவித்துள்ளார்.அதன்படி அவர் கூறியதாவது,பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் டெஸ்ட் ஷூட்க்காக தாடியை எடுத்து நீல முடியில் டெஸ்ட் ஷூட்டை முடித்து,இந்த வேடத்தினை காண்பிக்க சமுத்திரக்கனிக்கு போன் செய்துள்ளார்.அப்பொழுது சமுத்திரக்கனி தான் ஸ்டார் ஹோட்டலில் இருப்பதாகவும் அங்கு வரும்படி கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

சத்தியமா நான் சசிகுமாருங்க..என கூறியும் உள்ளே விட மறுத்த ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள்... 2

விளம்பரம்

அவரை பார்க்க சென்ற பொழுது தாடி இல்லாமல்,அழுக்கு சட்டையுடன்,செருப்பு காலுடன் வந்ததால் ஊழியர்கள் அடையாளம் தெரியாமல் உள்ளே விடவில்லை,உடனே சசிகுமார் சமுத்திரக்கனிக்கு போன் செய்துள்ளார்,கீழே வந்த சமுத்திரக்கனி நண்பா எனக்கே உன்னை அடையாளம் தெரியல அவங்களுக்கு எப்படி தெரியும் என கூறி ஊழியர்களிடம் பேசி உள்ளே அழைத்து சென்றுள்ளார்.இந்த நகைச்சுவையான நிகழ்வை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சசிகுமார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment